முடக்கப்பட்ட இணையங்கள்:
|
சிரியன் எலக்டோனிக் ஆர்மி ('Syrian Electronic Army') எனும் பெயரில் சிரிய அரசுக்குப் பின்னால் இருந்து இயங்கும் இணையங்களை முடக்கும் குழு ஒன்று #கத்தார் நாட்டின் பல அரச இணையங்களை இன்று (சனி) காலை முடக்கியுள்ளது.!!
முடக்கப்பட்ட இணையங்கள்: வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா? என்ற ஏக்கத்தில் வாழும் ஏழைப் பெற்றோரின் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரதேச வள்ளல்கள் மனம் வைக்காததால் பிரஸ்தாப மக்களது அழுகுரல் மௌன கீதமாய் எங்கும் ஒலிக்கிறது. இந்த அழுகுரல் வெளியுலகத்திற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கண்டு மனவேதனை அடைகின்றேன்.
எதிர்வரும் விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பிரயாணங்கள் செல்ல உத்தேசித்துள்ள முஸ்லிம்கள் முடியுமான வரை நாட்டின் தற்போதைய நிலமையைக் கவனத்தில் கொண்டு அவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு செல்பவர்கள் இஸ்லாத்தின் வரையரைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழமை போன்றே இம்முறையும் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.
சிறுவயதிலிருந்தே நான் பெளத்த மதத்தை மிகவும் நேசித்தேன். புத்தரின் வாழ்க்கை வரலாறு, ஜாதகக் கதைகள் மற்றும் போதனைகளை நான் அதிகமாக வாசித்தேன். அதன் விளைவாக நான் பெளத்த மதத்தை தழுவினேன் என அண்மையில் தலங்கம நாகித்த என்ற பெயரில் பிக்குவாக துறவறம் பூண்ட மொஹம்மட் சப்ராஸ் ஆப்தீன் சிங்கள ஊடகமொண்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஹலால் பிரச்சினை ஆரம்பித்து இன்று இஸ்லாமிய ஷரியாக்களில் கை வைக்கிறார்கள் சில விஷமிகள். இதனால் முஸ்லிம்கள் நாம் ஆத்திரம் அடைகிறோம். ஆத்திரம் அடைய வேண்டும். முஸ்லிம் அல்லாத சகோதரர்களும்கூட இந்த ஈனச் செயலைப் பார்த்து கோபமடைகிறார்கள். இந்த கோபம் எங்கு சென்று முடியும் என்று உங்களுக்கு தெரியுமா…
(வெண்டோல் உற்பத்தி பொருட்களின் முதலாளி வழங்கிய சிங்கள மொழி செவ்வி)
(தமிழில் அபூ முஸ்னா + மொஹமட் றிமாஸ்) ஹலால் இலட்சினை தற்போது பாரிய பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. எமது உற்பத்திகளில் மிருகக் கொழுப்பு அடங்கியிருக்கவில்லை என உற்பத்தி ஆரம்பம் முதலே சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் குறிப்பிட்டிருந்தோம். ஹலால் மூலம் அதனை மிகவும் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஹலால் சான்றிதழ் விவகாரத்தை பொதுபலசேனா இன்று ஒரு தேசிய பிரச்சினையாக மாற்றி விட்டது. இதுவரை காலமும் பொதுபலசேனாவுக்கு மாத்திரம் பிரச்சினையாகவிருந்த ஹலால் சான்றிதழ் இன்று நாட்டின் உயர் மட்டத் தலைவர்களுக்குக் கூட பிரச்சினையாகத் தெரிவது ஏன் என்பது தான் புரியவில்லை.
|