கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பெயரில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு மிரட்டல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய முகாம், முஹம்மது ஹனீபா சித்தி உம்மா என்பவர் இன்று காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காலம் சென்ற அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும் சலீம், லத்தீப், ஆரிபா, லத்திபா மற்றும் ஜெமிலா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸரின் பின்னர் மத்திய முகாம் முஹம்மதிய்யா பள்ளி வாயல் மையானத்தில் நடைபெறும். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அள்ளாஹ்வுக்கே புகழனைத்தும் அல்-ஹம்துலில்லாஹ்.
இலங்கையை பொறுத்த வரைக்கும் அரச பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட வேண்டும் என்பது ஒரு சட்டமாக இருக்கலாம். மத்திய முகாம் சது. அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் ஒரு வாரமாக நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டுப்போட்டி இன்று மாலை நிறைவடைய இருக்கிறது.
மத்திய முகாம், சவளக்கடை பிரதேசத்தில் அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் மஜ்லிசுத் தஃவா எனும் பெயரில் ஓர் இஸ்லாமிய அமைப்பொன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு பல சேவைகளை இந்த நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுத்து வருகிறது. அண்மையில் செயலாளர் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக நேற்றிரவு கூடிய வாராந்த கூட்டத்தில் மௌலவி ஷஹாப்தீன் (ஹாமி) உத்தியோகபூர்வ செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் போது உப செயலாளராக மௌலவி அலிஅக்பர் (ஹாமி) நியமிக்கப்பட்டார். இந்தக் கூட்டம் மஜ்லிசுத் தஃவா அமைப்பின் தலைவர் மௌலவி அஸ்வர் (ஹாமி) தலைமையில் நடைபெற்றது. 12ம் கிராம ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய பேஷி இமாமாக மௌலவி ஷஹாப்தீன் (ஹாமி) நேற்று முதல் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஏற்கனவே கடைமையாற்றிய மௌலவி அஸ்வர் (ஹாமி) (தலைவர் ஜம்இய்யதுல் உலமா, மத்திய முகாம், சவளக்கடை) அவர்கள் தானாக விலகிக் கொண்டதை அடுத்து மேற்படி மௌலவி கடைமையேற்றள்ளார். ஏற்கனவே கடைமையாற்றிய மௌலவி அஸ்வர் அவர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பணிபுரிந்துள்ளார். தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் மௌலவி இதற்கு முன்னரும் அந்த பள்ளிவாயலில் கடைமையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. |